Kandukondain kandukondain -[கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்]

Movie: Kandukondain Kandukondain

Music: A. R. Rahman

Direction: Rajiv Menon

Lyrics: Vairamuthu

Singers:  Hariharan and Mahalakshmi Iyer



ஆண் : கண்டுகொண்டேன் ...கண்டுகொண்டேன்...
காதல் முகம் கண்டுகொண்டேன்...!
கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேன்...
காதல் முகம் கண்டுகொண்டேன்...!
விரல் தொடும் தூரத்திலே...
வெண்ணிலவு கண்டுகொண்டேன்...!

ஆண் : வெண்ணிலா... வெளிச்சம்
கிண்ணத்தில் விழுந்து...
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி.

ஆண் : வெண்ணிலா... வெளிச்சம்
கிண்ணத்தை உடைத்தால்...
உயிரை உடைப்பாள் ஒருத்தி..!

பெண் : என் கண் பார்த்தது..
என் கை சேருமோ..

ஆண் : கை சேராமலே...
கண்ணீர் சேருமோ...

பெண் : கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேன்...
காதல் முகம் கண்டுகொண்டேன்...!

ஆண் : மலர்மஞ்சம் விழி கெஞ்சும்
மனம் அஞ்சுமல்லவா...

பெண் : உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம்
உன் தஞ்சமல்லவா...

ஆண் : உன் தனிமைக் கதவின்
தாள் நீக்கவா...

பெண் : கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேன்...
காதல் முகம் கண்டுகொண்டேன்...!

பெண் : மேகம் திறந்தால்
அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்.
பூக்கள் திறந்தால்
அதற்குள் உன் குரல் கேட்கிறேன்.

ஆண் : கண்களைத் திறந்தும்
கனவுகள் வளர்க்கும்
காதலின் விரல்கள்
கல்லையும் திறக்கும்...

பெண் : உன்னைத் தேடியே
இனி எனது பயணமோ..?
எந்தன் சாலைகள்
உன் வீட்டில் முடியுமோ..?

ஆண் : ஏ... கனவு மங்கையே
உனது மனது எனது மனதில்
இணையுமோ..?

பெண் : கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேன்...
ஹே ஹேய்ய்...
காதல் முகம் கண்டுகொண்டேன்...
ஹே ஹேய்ய்...

ஆண் : விரல் தொடும் தூரத்திலே...
ஹே ஹேய்ய்...
வெண்ணிலவு கண்டுகொண்டேன்...

ஆண் : ஆஆஆஆ…
நதியின் தேடல் கடைசியில்
கடல் காண்பது.
உயிரின் தேடல் கடைசியில்
உனைக்காண்பது.

பெண் : கடல் கொண்ட நதியோ
முகம் தனை இழக்கும்.
நான் உன்னில் கலந்தால்
புது முகம் கிடைக்கும்.

ஆண் : நட்சத்திரங்களை
ஒரு நாரில் கட்டுவேன்...
எந்த நேரமும்
உன் கதவு தட்டுவேன்...

பெண் : ஏ... காதல் தேவனே..
எனது இமையில் உனது விழிகள்
மூடுவேன்...

ஆண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன்...
பெண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன்...
ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்…
பெண் : காதல் முகம் கண்டுகொண்டேன்...

ஆண் : விரல் தொடும் தூரத்திலே…
பெண் : விரல் தொடும் தூரத்திலே...
ஆண் : வெண்ணிலவு கண்டுகொண்டேன்...

பெண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன்...
ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்..!
Powered by Blogger.