Thoodhuvalai Ilai Arachi- [தூதுவளை இலை அரைச்சி]

July 04, 2021

 

Movie: Thaai Manasu

Music: Deva

Direction: Kasthuri Raja

Lyrics: Kasthuri Raja

Singers:  S. Janaki, Mano



பெண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா...

பெண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா...

பெண்: அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்
நான் காத்தாகி ஊத்தாகி
மாமன தழுவி கட்டிக்கணும்...

ஆண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா...

ஆண்: நாள் தோறும் காத்திருந்தேன், நானே தவமிருந்தேன்
உனக்காக தான், கண்ணே உனக்காக தான்
பெண்: நான் கூட மனசுக்குள்ள, ஆசை வளத்துகிட்டேன்
உன்னை பார்க்கத்தான், மாமா உன்னை பார்க்கத்தான்...

ஆண்: அட முத்துன கிறுக்கு மொத்தமும் தெளிய முறையிடலமோ...
பெண்: சுத்துற கண்ணுல சிக்குன என்னை சிறையிடலாமோ...

ஆண்: எத்தனை நாள் இப்படி நான் ஏங்கிறது...
பெண்: பொட்டு வைச்சு பூ முடிக்கும் நாளிருக்கு...

பெண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா...

 ஆண்: தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா...

ஆண்: ஊர் தூங்கும் வேலையிலும், நான் தூங்க போனதில்லை
உன்னால தான், கண்ணே உன்னால தான்...
 பெண்: யார் பேச்சு கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம்
உன் பேரு தான், நித்தம் உன் பேரு தான்...

 ஆண்: இத்தனை நனப்பு என் மேலே இருந்தும் எட்டி போகலாமோ...
 பெண்: கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும் முன்னே முட்டிகொள்ளலாமோ...

ஆண்: முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும்?
பெண்: சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும்?

பெண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா...
 
ஆண்: தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா...

பெண்: அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்...
ஆண்: அந்த ரம்பையும் ஊர்வசியும்
மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்...
பெண்: நான் காத்தாகி ஊத்தாகி
மாமனே தழுவி கட்டிக்கணும்...

ஆண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா...
பெண்: தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா..!!
 
Powered by Blogger.