Yaar Intha Saalai Ooram - [யாா் இந்த சாலை ஓரம்]

Movie: Thalaivaa

Music: G.V. Prakash

Direction: A.L. Vijay

Lyrics: Na Muthu Kumar

Singers: G.V. Prakash, Sainthavi 


ஆண்: யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
பெண்: யாா் எந்தன் வாா்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது

ஆண்: நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
பெண்: குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் தான் கொல்லுதே

ஆண்: எந்தன் நாளானது இன்று வேரானது
வண்ணம் நூறானது வானிலே

ஆண்: யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது

ஆண்: தீர தீர ஆசை யாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில்
தள்ளி நிற்கலாம்
பெண்: என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம்என்று கண்டு கொள்ளலாம்
ஆண்: என்னாகிறேன் என்று ஏதாகிறேன்
பெண்: எதிா் காற்றிலே சாயும் குடையாகிறேன்
ஆண்: எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
அது பறந்தோடுது வானிலே

பெண்: யாா் எந்தன் வாா்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது

ஆண்: மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மழையிலே
அது மழையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே
பெண்: வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும்
என்றும் மண்ணிலே
ஆண்: கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி
பெண்: என் பாதையில் இன்று உன் காலடி
ஆண்: நேற்று நான் பாா்ப்பதும் இன்று நீ பாா்ப்பதும்
நெஞ்சம் எதிா் பாா்ப்பதும் ஏனடி

ஆண்: யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
பெண்: யாா் எந்தன் வாா்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
ஆண்: நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
பெண்: குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம்தான் கொல்லுதே
ஆண்: எந்தன் நாளானது இன்று வேரானது
வண்ணம் நூறானது வானிலே...!!!

Yaar Intha Saalai Ooram lyrics in tamil


Powered by Blogger.