Aathangara maramae -[ஆத்தங்கரை மரமே]

 

Movie: Kizhakku Cheemayile

Music: A R Rahman

Direction: Bharathiraja

Lyrics: Vairamuthu

Singers: Mano and Sujatha Mohan





ஆண் : அத்தைக்கு
பிறந்தவளே... ஆளாகி
நின்றவளே... பருவம்
சுமந்து வரும் பாவாடை
தாமரையே...

ஆண் : தட்டாம்பூச்சி
பிடித்தவள் தாவணிக்கு
வந்ததெப்போ? மூன்றாம்
பிறையே நீ முழு நிலவா
ஆனதெப்போ? மெளனத்தில்
நீ இருந்தா யாரை தான்
கேட்பதெப்போ? ஓ…

ஆண் :  ஆத்தங்கரை
மரமே... அரச மர இலையே...
ஆலமர கிளையே... அதில்
உறங்கும் கிளியே... (2)

ஆண் : ஓடைக்கர ஒழவு
காட்டுல ஒருத்தி! யாரு
இவ வெடிச்சி நிக்குற
பருத்தி !தாவி வந்து
சண்டை இடும் அந்த
முகமா...

ஆண் : தாவணிக்கு
வந்ததொரு நந்தவனமா...
உள்ள சொந்தம் என்ன
விட்டு போகாது .அட
ஓடத்தண்ணி உப்பு
தண்ணி ஆகாது.

பெண் : ஆத்தங்கரை
மரமே... அரசமர இலையே...
ஆலமர கிளையே... அதில்
உறங்கும் கிளியே...

ஆண் : ………………………

பெண் : மாமனே உன்னை
காண்காம...மத்தியில்
சோறும் உண்காம... பாவி
நான் பருத்தி மாரா போனேனே..!

பெண் : காகம் தான்
கத்தி போனாலும்...
கதவு தான் சத்தம்
போட்டாலும்... உன்
முகம் பாக்க ஓடி
வந்தேனே...

பெண் : ஒத்தையில்
ஓடைக்கரையோரம்
கத்தியே உன் பேர்
சொன்னேனே..! ஒத்தையில்
ஓடும் ரயில் ஓரம் கத்தியே
உன் பேர் சொன்னேனே...!
அந்த இரயில் தூரம்
போனதும் நேரம் ஆனதும்
கண்ணீர் விட்டேனே...

பெண் : முத்து மாமா
என்னை விட்டு
போகாதே... என் ஒத்த
உசுரு போனா மீண்டும்
வாராதே...

ஆண் : ஆத்தங்கரை
மரமே... அரசமர இலையே...
ஆலமர கிளையே... அதில்
உறங்கும் கிளியே....

ஆண் : தாவணி
பொண்ணே சுகந்தானா...
தங்கமே தளும்பும்
சுகந்தானா... பாறையில்
சின்ன பாதம் சுகந்தானா...

ஆண் : தொட்ட பூ
எல்லாம் சுகந்தானா...
தொடாத பூவும் சுகந்தானா...
தோப்புல ஜோடி மரங்கள்
சுகந்தானா...

ஆண் :  அயித்தயும்
மாமனும் சுகந்தானா...
ஆத்துல மீனும் சுகந்தானா... (2)
அன்னமே உன்னையும்
என்னையும் தூக்கி வளர்த்த
திண்ணையும் சுகந்தானா...

ஆண் : மாமன்
பொண்ணே மச்சம்
பார்த்து நாளாச்சு...
உன் மச்சானுக்கு
மயிலப் பசுவு தோதாச்சு...

பெண் : ஆத்தங்கரை
மரமே... அரசமர இலையே...
ஆலமர கிளையே... அதில்
உறங்கும் கிளியே...

ஆண் : ஓடைக்கர ஒழவு
காட்டுல ஒருத்தி... யாரு
இவ வெடிச்சி நிக்குற
பருத்தி... தாவி வந்து
சண்டை இடும் அந்த
முகமா ?தாவணிக்கு
வந்ததொரு நந்தவனமா...

பெண் : உள்ள சொந்தம்
என்ன விட்டு போகாது...
அட ஓடத்தண்ணி உப்பு
தண்ணி ஆகாது...

ஆண் : ஆத்தங்கரை
மரமே... அரசமர இலையே...
ஆலமர கிளையே...அதில்
உறங்கும் கிளியே...!
Powered by Blogger.