Sandhaiku Vantha Kili - [சந்தைக்கு வந்த கிளி]


ஆண்: சந்தைக்கு வந்த கிளி
ஜாட சொல்லி பேசுதடி.
சந்தைக்கு வந்த கிளி
ஜாட சொல்லி பேசுதடி.

ஆண்: முத்தம்மா முத்தம்மா
பக்கம் வர வெக்கமா?
முத்தம்மா முத்தம்மா
பக்கம் வர வெக்கமா?

ஆண்: குத்தாலத்து மானே,
கொத்து பூவாடிடும் தேனே.
குத்தாலத்து மானே,
கொத்து பூவாடிடும் தேனே.

ஆண்: சந்தைக்கு வந்த கிளி
ஜாட சொல்லி பேசுதடி.
சந்தைக்கு வந்த கிளி
ஜாட சொல்லி பேசுதடி.

ஆண்: காணாத காட்சி எல்லாம்
கண்டேனே உன்னழகில்.
பூப்போல கோலமெல்லாம்
போட்டாயே உன் விழியில்.

பெண்: மானாமதுரையில
மல்லிகப்பூ வாங்கி வந்து
மை போட்டு மயக்கினியே
கைதேர்ந்த மச்சானே.

ஆண்: தாமரையும் பூத்திருச்சி,
தக்காளி பழுத்திருச்சி.
தங்கமே ஒம்மனசு,
இன்னும் பழுக்கலியே.

பெண்: இப்பவே சொந்தம் கொண்டு நீ
கையில் அள்ளிக் கொள்ளு மாமா.

பெண்: சந்தைக்கு வந்த மச்சான்
ஜாட சொல்லி பேசுவதேன்?
சந்தைக்கு வந்த மச்சான்
ஜாட சொல்லி பேசுவதேன்?

பெண்: சொல்லவா சொல்லவா
ஒன்னு நான் சொல்லவா?
சொல்லவா சொல்லவா
ஒன்னு நான் சொல்லவா?

பெண்: கல்யாணத்த பேசி
நீ கட்ட வேணும் தாலி.
கல்யாணத்த பேசி
நீ கட்ட வேணும் தாலி.

பெண்: சந்தைக்கு வந்த மச்சான்
ஜாட சொல்லி பேசுவதேன்?
சந்தைக்கு வந்த மச்சான்
ஜாட சொல்லி பேசுவதேன்?

குழு: வந்தது வந்தது பொங்கல் 
     இன்று என்று
     மங்கல கும்மி கொட்டுங்கடி
     எங்கெங்கும் மங்கலம்
     பொங்கிடவே இங்கு
     மங்கையர் எல்லோரும்
     பாடுங்கடி.
     மஞ்சள குங்குமம் 
     கையில் தொட்டு.
     அம்மனை பாடிட வாருங்கடி,
     அம்மனை பாடிட வாருங்கடி.
     தந்தனத்தோம் சொல்லி
     பாடுங்கடி...

பெண்: ஆளான நாள் முதலாய்
ஒன்னத்தான் நான் நெனச்சேன்.
நூலாகத்தான் இளைச்சு
நோயில் தினம் வாடி நின்னேன்.

ஆண்: பூ முடிக்கும் கூந்தலிலே
ஏம்மனச நீ முடிச்ச.
நீ முடிச்ச முடிப்பினிலே
என் உசுரு தினம் தவிக்க.

பெண்: பூவில் நல்ல தேனிருக்கு.
பொன்வண்டு பாத்திருக்கு.
இன்னும் என்ன தாமதமோ
மாமனுக்கு சம்மதமோ?

ஆண்: இப்பவே சொந்தம் கொள்ளவே
கொஞ்சம் என்னருகில் வாம்மா.

ஆண்: சந்தைக்கு வந்த கிளி
ஜாட சொல்லி பேசுதடி.

பெண்: சந்தைக்கு வந்த மச்சான்
ஜாட சொல்லி பேசுவதேன்.

ஆண்: முத்தம்மா முத்தம்மா
பக்கம் வர வெக்கமா?

பெண்: சொல்லவா சொல்லவா
ஒன்னு நான் சொல்லவா?
பெண்: கல்யாணத்த பேசி
நீ கட்ட வேணும் தாலி.

ஆண்: ஹேய்..குத்தாலத்து மானே
கொத்து பூவாடிடும் தேனே.

ஆண் & பெண்: தந்தன்னா தானே தன்னே...
 தந்தன்னா தானே தன்னே...!!!

Movie: Dharmadurai

Music: Ilayaraja

Direction: Rajashekar

Lyrics: Panchu Arunachalam

Singers: S.P.B, S.Janaki 

Santhaiku vantha kili song lyrics in Tamil


Powered by Blogger.