Oru poiyavathu sol kannae -[ஒரு பொய்யாவது சொல் கண்ணே]

 

Movie: Jodi

Music: A.R. Rahman

Direction: Praveen Gandhi

Lyrics: Vairamuthu

Singers:  Hariharan





ஆண் : ஒரு பொய்யாவது
சொல் கண்ணே... உன் காதல்
நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன்...  (3)

ஆண் : பூக்களில் உன்னால்
சத்தம். 
அடி மௌனத்தில்
உன்னால் யுத்தம் .
இதைத்
தாங்குமா என் நெஞ்சம்…
இதைத் தாங்குமா என் நெஞ்சம்...

ஆண் : உண்மையும் பொய்மையும்
பக்கம்பக்கம்தான்... ரொம்பப் பக்கம்
பக்கம்தான்... பாா்த்தால் ரெண்டும்
ஒன்றுதான்...

ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும்
வண்ணம் ஒன்றுதான்... பாா்க்கும்
கண்கள் ஒன்றுதான் ...உண்டால்
ரெண்டும் வேறுதான்...

ஆண் : ஒரு பொய்யாவது
சொல் கண்ணே... உன் காதல்
நான் தான் என்று... அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன்...

ஆண் : இரவினைத் திரட்டி
ஓ… ஆ… இரவினைத் திரட்டி
கண்மணியின் குழல் செய்தாரோ..!
கண்மணியின் குழல் செய்தாரோ..!
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள்
செய்தாரோ…!

ஆண் : விண்மீன் விண்மீன்...
கொண்டு விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு
கைரேகை செய்தானோ…

ஆண் : வாடைக் காற்று
பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டுத் தங்கம் தங்கம் பூசித்
தோள் செய்தானோ... ஆனால்...
பெண்ணே... உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ... காதல்
கண்ணே... உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ...

ஆண் : ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று... அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன்...

{ அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் } (2)
நான் உயிா் வாழ்வேன் ...உயிா் வாழ்வேன்...
{ அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல் } (2)
சொல்லில் அந்த சொல்லில்...
{ உயிா் வாழ்வேன்..! } (3)
Powered by Blogger.