Aagaya Vennilave - [ஆகாய வெண்ணிலாவே]

  Movie: Arangetra Velai

Music: Ilayaraja

Direction: Fazil

Lyrics: Vaali

Singers: KJ Yesudas, Uma Ramanan



ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ?
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ?

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ?
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ?

ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் கால மேகமாய் கூட..
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட..

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ?
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ?


ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று.
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று..

பெண்: தென்பாண்டி மன்னன் என்று திரு மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று.

ஆண்: இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்.
பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்.

ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட.
பெண்: நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட.

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ?
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ?

ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் கால மேகமாய் கூட.
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட.

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ?
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ?

பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்.
பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்..

ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்.
கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்..

பெண்: அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன?
ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன?

பெண்: இசை வீணை வாடுதோ? இதமான கைகளை மீட்ட.
ஆண்: சுதியோடு சேருமோ? சுகமான ராகமே காட்ட..

பெண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ?
ஆண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ?

பெண்: மலர் சூடும் கூந்தலே மழைக் கால மேகமாய் கூட.
ஆண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட..

பெண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ?
ஆண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ???

Aagaya Vennilave Song Lyrics in Tamil

Powered by Blogger.