Natpu Lyrics in Tamil- [நட்பு பாடல் வரிகள்]

 Movie: RRR

Music: Maragathamani (MM Keeravaani)

Direction: SS Rajamouli

Lyrics: Madhan Karky

Singers: Anirudh


ஆண்: புலியும் அவ் வேடனும்
குழு: புயலும் ஒரு ஓங்கலும்
ஆண்: புனலும் மடை வாயிலும்
குழு: புலமும் பெரும் பூட்கையும்
ஆண்: புலரும் இருள் வானமும் ஓ..ஓ...
குழு:  நட்பாய்...!
 
ஆண்: எங்காகிலும் பார்த்தது உண்டோ?
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ?
யார் யாரினை விழுங்குவர் என்பதைச்
சொல்வார் உண்டோ??? ஓ....

குழு: தர தம் தர தம் தர தம் தம்
தர தம் தர தம் தர தம் தம்
தர தம் தர தம் தர தம் தம்
தம் தர தம் தம் தம்
 
குழு: கழுத்தேறிய கயிரோடுயிர் நட்பாய்
கழுகும் ஒரு காலிலியும் நட்பாய்
கனவும் ஒரு விழிப்புணர்வும்
கரம் கூடிய கதை உண்டோ?

குழு: தர தம் தர தம் தர தம் தம்
தர தம் தர தம் தர தம் தம்
தர தம் தர தம் தர தம் தம்
தம் தர தம் தம் தம்
 
ஆண்: பசியாறும் பகைவனைக் கண்டு
குழு: மனம் இங்கு மகிழ்வது ஏனோ?
ஆண்: விழியோரக் கானல் கண்ணீரில்
பொய்யும் மெய்யாகுதோ?
 
ஆண்: தரையில் தன் நிழலினைக் கொண்டு
குழு: அதைத் தேடி அலைவது ஏனோ?
ஆண்: அறியாமையாலே மண்ணெங்கும்
இன்பம் உண்டாகுதோ? ஓ..ஓ..
 
குழு: ஈரெதிர் துருவங்கள் இணையும் என்றே
இயற்பியல் எழுதியதோ?
 
குழு: ஈரெதிர் பயணங்கள் இணையும் என்றே
இதயங்கள் எழுதியதோ?
 
ஆண்: எங்காகிலும் பார்த்தது உண்டோ?
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ?
யார் யாரினை விழுங்குவர் என்பதைச்
சொல்வார் உண்டோ?

குழு: தர தம் தர தம் தர தம் தம்
தர தம் தர தம் தர தம் தம்
தர தம் தர தம் தர தம் தம்
தம் தர தம் தம் தம்
 
குழு: கழுத்தேறிய கயிரோடுயிர் நட்பாய்
கழுகும் ஒரு காலிலியும் நட்பாய்
கணையும் அதன் குறியிலக்கும்
உறவாடிய கதை உண்டோ?

குழு: தர தம் தர தம் தர தம் தம்
தர தம் தர தம் தர தம் தம்
தர தம் தர தம் தர தம் தம்
தம் தர தம் தம் தம்

குழு: கழுத்தேறிய கயிரோடுயிர் நட்பாய்
கழுகும் ஒரு காலிலியும் நட்பாய்
களிறும் ஒரு சிற்றெரும்பும்
விளையாடிய கதை உண்டோ???

RRR Natpu Song Lyrics in Tamil.

Powered by Blogger.