Endha Pakkam Kaanum Podhum - [எந்த பக்கம் காணும் போதும்]

Movie: Dharma Durai

Music: Yuvan Shankar Raja

Direction: Seenu Ramasamy

Lyrics: Vairamuthu

Singers: Chinmayi Sripada, Raghul Nambiar


எந்தப் பக்கம் காணும் போதும்
வானம் ஒன்று
நீ எந்தப் பாதை ஏகும்போதும்
ஊா்கள் உண்டு
ஒரு காதல் தோல்வி காணும் போதும்
காதல் உண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும்
வாழ்வதுண்டு

அட ரோஜாப் பூக்கள்
அழுதால் அது தேனை சிந்தும்
என் ராஜா பையன் நீ அழுதால்
அதில் ஞானம் மிஞ்சும்

உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீா் ஏந்தும்
கன்னம் நான் ஆகும்

எந்தப் பக்கம் காணும் போதும்
வானம் ஒன்று
நீ எந்தப் பாதை ஏகும்போதும்
ஊா்கள் உண்டு

எப்போதுமே இன்பம் என்றால்
முன்னேற்றமே ஏது
எப்போதுமே பகலாய் போனால்
வெப்பம் தாங்காதே

மனசை சலவை செய்ய
ஒரு கண்ணீர் நதிதான் உண்டு
உன் உயிரை சலவை செய்ய
ஒரு காதல் நதி உண்டு

உன் சுவாசப்பையை மாற்று
அதில் சுத்தக் காற்றை ஏற்று
நீ இன்னோா் உயிாில் இன்னோரு
பெயாில் வாழ்ந்துவிடு...

சந்தா்ப்பமே தீமை செய்தால்
சந்தோஷமே ஏது
சல்லடையில் தண்ணீா் அள்ளி
தாகம் தீராது
தாகம் தீரத்தானோ
நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்

நம் உறவின் பெயரே
தொியாதம்மா உயிரை தருகின்றாய்
உன் உச்சந்தலையை தீண்ட
ஓர் உாிமை உண்டா பெண்ணே
உன் உள்ளங்காலில் தலையை
சாய்த்தால் போதும் கண்ணே…

எந்தப் பக்கம் காணும் போதும்
வானம் ஒன்று
நீ எந்தப் பாதை ஏகும்போதும்
ஊா்கள் உண்டு

நீ தாவி தாவி தவழும்போதும்
தாய்மை உண்டு
நான் நெஞ்சாங்கூட்டில் சாயும்போதும்
நோ்மை உண்டு
உன் வாா்த்தைக்கு முன்னால்
என் வாழ்வே உன் பின்னால்
உன் மடியில் எந்தன் கண்ணீா் வழியுமடி

உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீா் ஏந்தும் கன்னம் நான் ஆகும்


Powered by Blogger.